Posts

நிலம் காப்பாள் நித்யகல்யாணி

Image
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் அருள் பாலிக்கிறாள் நித்ய கல்யாணி அம்மன். செங்கோட்டை, கேரளா திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தபோது  திருவிதாங்கூர் மன்னர் குற்றாலத்திற்கு அடிக்கடி விஜயம் செய்வார்.  அவ்வாறு வந்துவிட்டு செல்லும்போது செங்கோட்டை அருகே இலத்தூரில் உள்ள  மதுநாதசுவாமியை தரிசனம் செய்துவிட்டுத் தான் செல்வார். ஒருமுறை இலத்தூருக்கு சென்று கொண்டிருக்கும்போது கானகத்தின் நடுவே உள்ள பாதையில்  மூங்கில் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்த பகுதியில் வந்ததும் மன்னரின் வண்டி நின்றுவிட்டது. சாரதி எவ்வளவோ முயன்றும் குதிரைகள் நகரவே இல்லை. அப்போது அடர்த்தியாக நின்ற மூங்கில் மரக்காட்டில் இருந்து ஒரு பெண்ணின் சிரிப்பொலி கேட்டது. திடுக்கிட்ட மன்னர்.  தனது சேவகர்களை உடனே அந்த மூங்கில்களை வெட்டி அகற்றுங்கள் என்று கட்டளையிட்டார். அப்போது அங்கிருந்து பெண் குரல் வந்தது. ‘‘மன்னா, நான்  குலசேகரநாதரின் மனைவி தனது பெயர் நித்ய கல்யாணி. அசைவ உணவை உண்ண ஆசைப்பட்டு வைராவி இனத்தார் வீடு சென்று உண்டு விட்டேன். அதற்கு  தண்டனையாக எனது கணவர் என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். ...

அழைப்பவர்க்கு காவலாய் வருவார் அடுக்கு சுடலைமாடன்

Image
திருநெல்வேலி டவுனில் உள்ளது அடுக்கு சுடலைமாடன் கோயில். இக்கோயிலில் அய்யன் சுடலைமாடன் பீடம், 21 படிகள் கொண்டு அடுக்கடுக்காக பிரமிடு   போன்ற அமைப்புடன் உள்ளதால் அடுக்குச்சுடலை என்ற பெயருடன் பக்தர்கள் அழைத்து வருகின்றனர். அடுக்குச்சுடலை தன்னை வணங்கி வரும் அடியவர்கள்   அழைத்தால் காவலாய் வருகிறார். திருநெல்வேலி மேலநத்தம் அக்னீஸ்வரர் கோயிலில் சுமார் 7 தலைமுறைக்கு முன்பு தர்மகர்த்தாவாக இருந்த சாவடி   சுப்பிரமணியபிள்ளை, தான் கட்டிவரும் வீட்டுக்கு தச்சுவேலைக்காக உயர்தர மரங்களை வெட்டிவர இருபதுக்கும் மேற்பட்ட ஆட்களை அழைத்துக் கொண்டு  ஆரியங்காவு மலைக்கு சென்றார்.  மரத்தை வெட்டும் முன்பு முத்துசாமி ஆசாரி, ‘‘ஐயா, மாடன் முதலான 21 பந்தி தேவதைகளுக்கு பூஜை செய்து தடியங்கா பலி கொடுக்கவேண்டும்’’ என்று   கூறியதற்கு அதெல்லாம் ‘‘சுடலைமாடன் காவலுக்குட்பட்ட காக்காச்சிமலை, கண்ணாடிச் சோலை மலைகளில் வெட்டும் போதுதான் பலி கொடுக்கணும்.   இங்கெல்லாம் வேண்டாம். மரத்த வெட்டச்சொல்லுங்க ஆசாரி,’’ என்று உத்தரவிட, அதன்படி மரத்தை தொழிலாளர்கள் வெட்டிக்கொண்டு வந்தனர். வரும் வழியில் ப...

அடியவர்க்கு அருள்புரிவாள் அருணாலட்சுமி அம்மன்

Image
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குருசாமிபுரத்தில் வீற்றிருக்கும் அருணா லட்சுமி அம்மன், தன்னை வணங்கும் அடியவர்க்கு அருள்புரிகிறாள்.  குருசாமிபுரத்தில் வாழ்ந்து வந்த சிவனிணைந்த பெருமாள், சண்முக வடிவம்மாள் தம்பதியினருக்கு குழந்தை இல்லை. ஜோதிடர் ஆலோசனைப்படி குலதெய்வக் கோயிலுக்குச் செல்ல முடிவு செய்தனர். அவர்கள் குலதெய்வம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தேரிக்குடியிருப்பில் அருள் பாலிக்கும் கற்குவேல் அய்யனார். அங்கு சென்று வழிபட்டு வந்தனர். அதன் பயனாக சண்முக வடிவம்மாள் கருவுற்றாள். அவளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அய்யனார் அருளால் பிறந்ததாலும், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்ததாலும் சிவனிணைந்தபெருமாள் தனது மகளுக்கு ஆதிபரமேஸ்வரன் அருணாசலம் எனும் பெயரை வைக்க விரும்பி அருணா என்றும் மூத்தது பெண் குழந்தையானால் மகாலட்சுமி வந்து பிறந்ததாக எண்ணி, லட்சுமியையும் சேர்த்து அருணா லட்சுமி என பெயரிட்டார்.  தனது மகள் தெய்வமகள் என்றெண்ணி அன்போடும், பாசத்தோடும் செல்லமாக வளர்த்து வந்தார். அருணா லட்சுமியைத் தொடர்ந்து இரண்டு ஆண் குழந்தைகளும், அதனையடுத்து ஒரு பெண் குழந்தையும் பிற...

திக்கற்றவர்க்கும் துணையிருப்பாள் தெற்கு மேட்டாள்

Image
நெல்லை மாவட்டம் - ராதாபுரம் தாலுகாவிற்குட்பட்ட தனக்கர்குளத்தில் தெற்குமேட்டாள் கோயில் அமைந்துள்ளது. சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா பகுதியில் கடுமையான வறட்சி நிலவியது. தனக்கர்குளம் ஊரிலும் இதே நிலை இருந்ததால், அப் பகுதியைச் சேர்ந்த பெரிய அணஞ்சி கோனார் மிகவும் வருந்தினார். அவர் நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். தம்பி சின்ன அணஞ்சியின் ஆலோசனைப்படி, ஆடுகளை உறவினர் ஒருவரிடம் மேய்க்கச் சொல்லிவிட்டு, அண்ணன், தம்பி இருவரும் மேய்ச்சலுக்கான பசுமையான இடம் தேடி, மலையாள நாட்டுக்கு வருகிறார்கள். தென்திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புதூர், அழகிய பாண்டிபுரம் பகுதிகளைச் சுற்றி மேய்க்கலாம் என முடிவு செய்து, அங்கிருந்து புறப்பட்டு தனது ஊருக்கு வருகின்றனர். மறுநாள் அதிகாலைப் பொழுதில் ஆடுகளை ஓட்டிச் சென்றனர். இரண்டு நாள் நடைப் பயணத்திற்கு பின்னர் கேசவன் புதூர், சூட்சணை அருகேயுள்ள கோணத்தில் பட்டி அடித்து (ஆட்டு கிடை) அமைத்து ஆடுகளை அடைத்தனர். பகலில் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு வந்தனர். தம்பி சின்னஅணஞ்சி...

உயர்வான வாழ்வு தருவார் ஒத்தப்பனை சுடலை

Image
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ளது சிறுமளஞ்சி. இவ்வூரில் அமைந்துள்ளது ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோயில். காவல் தெய்வங்களில் முதன்மையானவராக கருதப்படும் சுடலைமாடன் லிங்க வடிவில் சுயம்புவாக மூவாற்றங்கரையினிலே சீவலப்பேரியிலே தோன்றினார். அடைபட்ட சிமிழாய், அய்யன் திருக்கோட்டியப்பரால் அடையாளம் காட்டப்பட்டார் ஊர்க்காட்டில், தாமிரபரணியிலே வாடிய மலர்மாலையாய் வந்து சிறுவர்களிடத்தில் திருவிளையாடல் நிகழ்த்தி இரட்டை சுடலையாய் மேல கோயிலிலும், வேப்ப மரத்தின் அடியில் ஓங்கி உயர்ந்த புற்றாய் வேம்படிமாடனாய் கீழக் கோயிலிலும் ஆறுமுகமங்கலத்தில் எழுந்தருளினார்.  பக்தனுக்காக கோர்ட்டில் சாட்சியும் கூறி, ஐகோர்ட் மகாராசாவாக அழைக்கப்பட்டார். வாங்கிய மாடுகளுக்கு கொடுக்காத பணத்தை கொடுத்ததாக பொய் சத்தியம் செய்ததால், மாடுகளுடன் வந்து பொய் சத்தியம் செய்தவரை பழி தீர்த்து தான் யார் என்பதை காட்ட ஒத்தப்பனையில் காட்சி கொடுத்தார் விஜயநாராயணத்தில். ஓரினத்தானுக்குள் உருவான பகைக்காக பொய் சத்தியம் செய்ததால் ஒத்தப்பனை உயரத்திற்கு ஒளியாய் ஜொலித்தார் சிறுமளஞ்சியிலே. நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் ஏர்வாடி அ...

அருஞ்சுனை காத்த அய்யனார்

Image
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது மேலப்புதுக்குடி. இவ்வூரில் அமைந்துள்ளது அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில். சுமார் 700  ஆண்டுகளுக்கு முன்பு திருவைகுண்டத்தை தலைமையிடமாக கொண்டு சிங்கராஜன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அப்பகுதியில்  தடாகம்(நீர்நிலை) ஒன்று இருந்தது. அதிலுள்ள நீர் பன்னீர் போன்று தெளிந்தும், சுவை மிக்கதாகவும் இருந்தது. ஒரு முறை இந்த தடாகத்தில் இருந்து கனகமணி  என்ற கன்னிப்பெண் ஒருவர் குடத்தினில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு திரும்பினாள். கானகத்தின் வழியே நடந்து சென்றபோது வழியில் கல்லால் கால் இடறி  விழுந்தாள். அவள் விழுந்ததால் குடத்து நீர் அவ்விடத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரை நனைத்தது. தவநிலை கலைந்த முனிவர் கடும்சினம்  கொண்டார். கவனச்சிதறலால் கால் இடறி விழுந்த கன்னிகையே, ‘‘உன் கையால் எவர் நீர் வாங்கி அருந்தினாலும் அடுத்த கனமே அவர் மாண்டுபோவார். இதை நீ  வெளியே தெரிவித்தால் மறுகனமே மரணம் உன்னை தழுவும். இதையெல்லாம் விட நீ எவ்வகையில் இறந்தாலும் இறக்கும் தருவாயில் செய்யாத குற்றம்  சுமத்தப்பட்டு தண்டனைக்காக ம...

ஆயுள் பலம் தருவார் ஆலடி புதியவன்

Image
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு அருகிலுள்ள குரும்பூரில் வசித்து வந்தவர் வைரவன் நாடார். மனைவி, மக்களை அழைத்துக்கொண்டு, நெல்லை மேற்குப் பகுதிக்கு வந்து, ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூர் என்ற ஆலடிப்பட்டி கிராமத்தில் குடியேறினார். இந்தப் புலம் பெயர்தல் ஏழு தலைமுறைகளுக்கு  முந்தைய நிகழ்ச்சியாகும். தான் வணங்கி வந்த சாஸ்தாவுக்கும் அப்பகுதியில் சிறிய அளவில் கோயில் அமைத்து வழிபட்டு வந்தார். கூடவே குலதெய்வமான  சுடலைமாடனுக்கும் சிலை அமைத்து பூஜித்தார்.  அந்தப் பகுதியில், தனது மகன்களுக்கும் அவன் தரத்து வாலிபர்களுக்கும் பகை உருவானதால், வைரவன் நாடார் அங்கிருந்து திப்பணம்பட்டிக்கு வந்து  குடியமர்ந்தார். இங்கே அவர் விவசாயத் தொழிலை மேற்கொண்டார். மேலும் வீட்டில் கறவை மாடுகளும் வளர்த்து வந்தார். மகன் மூத்தவன் மாடு, கன்றுகளை  ஓட்டிக்கொண்டு, தன் நண்பர்களோடு மேய்ச்சலுக்கு சென்றான். காட்டில் அவரவர் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்க, சிறுவர்கள் ஆடிப்பாடி விளையாடுவதும்,  குளத்தில் நீராடுவதுமாகப் பொழுதை கழிப்பது வழக்கம். ஒருநாள் காலைப்பொழுதில் மாடுகள் கட்டப்பட்டிருந்த இடத்...